நடிகர் சுஷாந்த் சிங் மரணம் வழக்கில் அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்திக்கும் தொடர்பு இருப்பதாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜு நகர் காவல் நிலையத்தில் சுஷாந்த் சிங்கின் தந்தை புகார் கொடுத்தார். மேலும், சுஷாந்த் சிங் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது எனவும் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 8 மணி நேரம் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடைபெற்றது. ரியா சக்ரபோர்த்தி உடன் சேர்த்து ரியாவின் தந்தை இந்திரஜித், சகோதரர் ஷோவிக்விடமும் விசாரணைநடைபெற்றது.
பின்னர், நேற்று முன்தினம் (அதாவது சனிக்கிழமை ) மதியம் ரியாவின் சகோதரர் ஷோவிக்கை மீண்டும் விசாரணைக்கு அமலாக்கத்துறை அழைத்தனர், அவரிடம் சுமார் 18 மணி நேரம் விசாரணை முடிந்த பிறகு நேற்று (ஞாயிற்றுகிழமை) காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார்.
இந்நிலையில், இன்று நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது தந்தை இந்திரஜித், சகோதரர் ஷோவிக் ஆகியோர் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள். கடந்த வெள்ளிக்கிழமை ரியா கொடுத்த தகவல் படி அவரின் வருமானத்தை விட அதிகமாக அவர் வாங்கிய சொத்து இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…
Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…