ஓய்வு எடுக்கும் வயதில் மனைவியை கொன்றுவிட்டு சிறை சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்..!

  • மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்.
  • குடும்பத்தகராறு காரணமாக கணவனே மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை.

விழுப்புரம் மாவட்டம் சுதாகர் நகரை சேர்ந்த விழுப்புரம் இந்திரா என்பவர் பெட்டிக்கடை வைத்திருந்தார் அத்துடன் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி அதிகாலை அவர் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு அவரது கணவர் நடராஜன் தகவல் கொடுத்திருந்தார். அந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை  சேகரித்தனர். இந்திராவின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்திரா வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால் அதில் பணம் கொடுக்கல்-வாங்கலில் கொலை செய்யப்பட்டாரா?அல்லது அவர் அணிந்திருந்த நகைகள் மாயமானதால் கொள்ளையர்கள் கொலை செய்தார்களா?  என பல கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்திராவின் தம்பி வெங்கடேசன் தனக்கு நடராஜன் மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் கூறினார். பின்பு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மனைவியை கொலை செய்ததை அவரே ஒப்புக்கொண்டார். அரசுப்பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியரான நடராஜனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளன. முதல் மனைவி இந்திராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருக்கோவிலூரில் இரண்டாவது மனைவியான லீலாவுடன் இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி நள்ளிரவு இந்திராவை பார்க்க நடராஜன் வந்தபோது இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு கோவத்தில் இந்திராவின் தலையில் அங்கிருந்த இரும்பு கம்பியால் அடித்தார். பின்னர் அவரது உடல் மீது பழைய துணிகளை போட்டு மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

நடராஜன், திருட்டு சம்பவம் போல் இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்த 8 சவரன் நகையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். மறுநாள் இரண்டாவது மனைவி வீட்டிற்கு வந்து தனது மனைவி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். நடராஜனிடம் வாக்குமூலத்தை பெற்ற போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்