அமைச்சர் கடம்பூர் ராஜுயிடம் படப்பிடிப்பை தொடங்க கோரிக்கை.!

படப்பிடிப்பை தொடங்க அனுமதிக்குமாறு அமைச்சர் கடம்பூர் ராஜுயிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 31 -ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

ஆகஸ்ட் 1 முதல் மேலும் சில தளர்வுகள் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொரோனா வைரஸ் 3 மாதங்களுக்கு மேலாக படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  திரைப்பட படப்பிடிப்பை தொடங்க அனுமதிக்குமாறு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுயிடம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

author avatar
murugan