டெல்லியில் ஷாப்பிங் மால்களில் மதுபான கடைகள் மீண்டும் திறப்பு!

டெல்லி ஷாப்பிங் மால்களில் அமைந்துள்ள 37 மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க டெல்லி அரசு அனுமதித்துள்ளது.

டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை நெருங்கவுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதன்காரணமாக, அங்கு ஷாப்பிங் மால்களில் அமைந்துள்ள 37 மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க டெல்லி அரசு அனுமதித்துள்ளது. மேலும், டெல்லி நகரத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில்மதுபான கடைகள் திறக்க அனுமதில்லை என அறிவித்தனர்.