வரும் 28-ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு – உயர்கல்வித்துறை

பி.இ. மற்றும் பிடெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28-ஆம் தேதி வெளியீடு.

தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக, கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான இணையதள பதிவு முடிவடைந்து, அதற்கான ரேண்டம் எண் கடந்த மாதம் 26-ம் தேதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, 17-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில மாணவர்கள் சரியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதால் 25-ம் தேதியன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் இன்னும் முடியாததால் தரவரிசை வெளியீடு தாமதமாகி உள்ளதாக கூறியுள்ளது.

https://www.tneaonline.org/  என்ற இணையத்தில் மாணவர்கள் தங்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு விட்டதா என மாணவர்கள் அறியலாம் என்று தெரிவித்துள்ள உயர்கல்வித்துறை, வரும் 28-ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்