செம்பரம்பாக்கத்தில் இருந்து திறக்கப்படும் நீர் அளவு 1500 கனஅடியாக குறைப்பு..!

வங்கக்கடலில் உருவான ‘நிவர்’ புயல் புதுச்சேரி அருகே அதிதீவிர புயலில் இருந்து தீவிர புயலாக வலுவிழந்து கரையைக் கடந்த நிலையில், பல பகுதிகளில் மழை குறைந்தது. இதனால், ஏரிக்கு நீர் வரத்து குறைந்ததால் ஏரியில் இருந்து 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விநாடிக்கு 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 13.3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் நிலையாக வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan