கோவை மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில், கழிவுநீர் கால்வாயில் இருந்து ஆண் குழந்தை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் பகுதியில், கழிவுநீர் கால்வாயில் இருந்து தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தையை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு 5 முதல் 6 மாதங்கள் வரை தான் ஆகி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.