வாணி போஜன் என நினைத்து ரியல் எஸ்டேட் அதிபரை தொல்லை செய்யும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் சமீபத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில்  “ஓ மை கடவுளே” திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில் வாணி போஜன், அசோக் செல்வன்  ரித்விகா சிங் மற்றும்   கவுரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளனர்.

இப்படம் வெளியாகி 20 நாள்களுக்கு மேல் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் வாணி போஜன் அசோக் செல்வனுக்கு தன்னுடைய நம்பரை கொடுக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் வாணி போஜன் இப்படத்தில்  பரிமாறும் எண்ணை 19 வருடங்களாக சென்னை எம்.கே.பி நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பூபாலன் என்பவர் பயன்படுத்தி வருகிறார். கடந்த சில நாள்களாக  தன்னுடைய எண்ணிற்கு 50-க்கும் மேற்பட்ட நபர்கள் அழைத்து ஆபாசமாக பேசுவதாக கூறி “ஓ மை கடவுளே” பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மீது சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

author avatar
murugan