கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு களுக்கு புதிய விதிமுறைகளைக் கொண்டு வருகிறது ஆர்.பி.ஐ

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு களுக்கான புதிய விதிமுறைகளை கொண்டு வருகிறது இந்திய ரிசர்வ் வங்கி. இந்த புதிய விதிமுறைகள் வரும் அக்டோபர் 1முதல் நடைமுறைக்கு வருகிறது.

வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தியே பெற்றுக்கொள்கின்றனர். இப்படி ஆன்லைனில் பணம் செலுத்தும் மற்றும் பெரும் முறைகளில் குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது.

ஆன்லைன் முறையில் அதிகமாக பண மோசடிகள் நடை பெற்று வருகிறது இதைத் தடுக்கவே தற்பொழுது ரிசர்வ் வங்கி புதிய விதிகளைக் கொண்டுவர இருக்கிறது. இதன்படி கார்டு-ஆன்-ஃபைல் (CoF) டோக்கனைசேசன் எனும் புதிய விதிமுறைகள் வர இருக்கின்றன.

பொதுவாக வாடிக்கையாளர்கள், தங்களின் கார்டு விவரம் கொடுத்து பணம் செலுத்தும் போது அந்த தகவல்கள் திருடப்பட்டு அவற்றின் மூலம் பணம் திருடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆனால் தற்பொழுது வர இருக்கும் டோக்கனைசேசன் முறைப்படி உண்மையான கார்டு விவரங்களுக்கு பதிலாக டோக்கன் எண்  பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வாடிக்கையாளர், ஒரு பொருளுக்கான பணத்தை செலுத்தும் போது கடையின் வணிகர் கார்டு ஐப் பெற்றுக்கொண்டு அதற்கான டோக்கன் எண்ணைக் கேட்டு சம்பந்தப்பட்ட கார்டு நெட்ஒர்க் கிற்கு ஒப்புதல் கேட்பார். பிறகு அந்த நெட்ஒர்க், வணிகருக்கு டோக்கன் எண்ணை அனுப்புவார்கள் அதன்பின் சிவிவி (cvv) எண் மற்றும் OTP ஐ கொடுத்து வர்த்தகத்தை முடித்துக்கொள்ளலாம்.

இதன் மூலம், ஆன்லைனில் நடைபெறும் பண மோசடியை தவிர்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வருவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar

Leave a Comment