அணுமின் நிலைய ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரவிக்குமார் எம்.பி கடிதம்..!

கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

தொழிலாளர் துறை நிலைக்குழு உறுப்பினரும் விழுப்புரம் எம்.பியுமான ரவிக்குமார், மத்திய அமைச்சர் சந்தோஷ்குமார் காங்வாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில்,கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும்.  மத்திய அரசின் அணுசக்தித்துறைக்குக் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் கல்பாக்கத்தில் உள்ள ‘நியூக்ளியர் பவர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் ( NPCIL) ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் இல்லை.

இதனால் அங்கு பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்

author avatar
murugan

Leave a Comment