பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்து நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். இணைத்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
இந்தநிலையில், ரேஷன் கடைகளில் உணவு பொருட்களுக்கான மானியம் வழங்க ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு ரூ.16,262 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.2,393 கோடியும், நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். மேலும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.30,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.