கூட்டணி குறித்து இனி என்னிடம் கேட்பதை விட, யார் தலைமையோ அவர்களிடம் கேளுங்கள் – பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி குறித்து தலைமை தாங்கும் அதிமுகவை தான் கேட்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஊடகங்கள் எந்தவொரு செய்தியை வெளியிடுவதாக இருந்தாலும், தலைமை கழகத்தை தொடர்புகொண்டு, அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகள் இனி கலந்து கொள்வர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் கூட்டணி குறித்து இனி என்னிடம் கேட்பதை விட, யார் இந்த கூட்டணிக்கு தலைமையோ (அதிமுக) அவர்களிடம் கேளுங்கள் என்றும் அதிமுக தலைமைதான் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். கூட்டணியில் எந்த குழப்பமோ, பிரச்சனையோ இல்லை, எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் தேதியை அறிவித்தவுடன் நிச்சயமாக செயற்குழு, பொதுக்குழுவு கூட்டத்தில் கூட்டணி குறித்து நல்ல முடிவை கேப்டன் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், வெளிப்படையாக பல்வேறு முறை எங்களுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள் என்று அழைப்பை விடுத்துள்ளார். ஆனால் அதிமுக தரப்பில் இதுவரை அதுகுறித்து எந்தவிதமான தெளிவான பதிலும் இல்லை மவுனம் மட்டுமே நீடித்து வருகிறது. இருப்பினும் தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப் 14-ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை, அதிமுக கூட்டணியில் இருக்கும் நீங்கள் சந்திக்க வாய்ப்பு இருக்கா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் கூறிய பிரேமலதா விஜயகாந்த், பிரதமர் தமிழகத்தில் 3 மணிநேரம் மட்டும் தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை பிரதமரை வரவேற்பதற்கான அழைப்போ அல்லது சந்திப்பதற்கான அழைப்போ அவர்கள் தரப்பில் இருந்து வந்தால், நாங்கள் கட்டாயம் பிரதமரை சந்திப்போம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

3 hours ago

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

5 hours ago

பேட் ரூம் காட்சியில் படு கிளாமராக நடித்த பிரியா ஆனந்த்! அதுவும் அந்த புது படத்திலா?

Priya Anand : நடிகை பிரியா ஆனந்த்  படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…

6 hours ago

காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!

Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…

7 hours ago

பட்ஜெட் விலையில் அசத்தல் 5G ஸ்மார்ட்போன் !! ரயில்மி சி 65யின் அம்சம், விலை விவரம் இதோ !!

Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…

7 hours ago

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 75% பேர் போலியான DeepFake வீடியோக்களை பார்த்துள்ளனராம்..!

DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…

7 hours ago