ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் இடைத்தரகர் கைது

ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் இடைத்தரகர் ரேகாவை பெங்களூருவில் கைது செய்தது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.பின்  நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.

தற்போது வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட பெங்களூரை சேர்ந்த ரேகா என்பவரை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் 18-க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Comment