தங்களுக்கு தாங்களே வேலி போட்டும்… பல கட்டுப்பாடுகள் விதித்து கொரோனாவை எதிர்க்கும் ராசிபுரம் கிராம மக்கள்…

கொரோனா வைரஸ் தொற்று பாதிபிலிருந்து பாதுகாப்பாக இருக்க  பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அரசு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதில், பாரத பிரதமர் கேட்டுக்கொண்டதன்பேரில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடெங்கும் கடைப்பிடிக்க தற்போது கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் தவிர அனைத்துக் கடைகளும், அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்து அடியோடு முடக்கப்பட்டு சாலைகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாநிலம், மாவட்டமும் யாரும் நுழைய முடியாத அளவிற்கு சீல் வைக்கப்பட்டு காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், ராசிபுரம் அருகே உள்ள நாச்சிப்பட்டியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அந்த கிராம மக்கள் அவர்களே  தற்போது தடுப்பு வேலி அமைத்துள்ளனர். நாச்சிப்பட்டியில்  உள்ள  கிராமங்கள் யாரும் ஊரை விட்டு வெளியே செல்லவும், வெளியூர் மக்கள் யாரும்  ஊருக்குள் வரவும் தடை வித்தித்துள்ளனர். இவர்களின் இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை அனைவரையும் தற்போது ஆச்சரியத்தில் அழ்த்தியுள்ளது. இது போல் ஒவ்வொருவரும் சமுக இடைவெளியை கடைபிடித்தால் கொரோனோவை அடியோடு விரட்டிவிடலாம்.

author avatar
Kaliraj