பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளத்திற்கு வெற்றி.. கருத்துக்கணிப்பு முடிவு..!

கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடைப்பெற்றது. நேற்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும். யாருக்கு வெற்றி கிடைக்கும் என பல்வேறு ஊடகங்களின் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.

பீகாரில்  ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. அந்த வகையில் கருத்துக்கணிப்பு முடிவுகள்வெளியாகி உள்ளது. அதில் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது.

இந்த கூட்டணி 116-138 இடங்களை பிடிக்கும் என ரிபப்ளிக் டி.வி., ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு கூறுகின்றன. அதே நேரத்தில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க. கூட்டணி 91-119 இடங்களில் வெற்றி பெறும் என  கருத்துக்கணிப்பு கூறுகின்றன.

author avatar
murugan