விஜய் தேவரகொண்டா குறித்து மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா!

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா  இருவரும் காதலத்தித்து வருவதாக எப்போதுமே சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், இருவருமே பேட்டிகளில் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் வதந்திகள் எதையும் நம்பவே வேண்டாம் என்று தெரிவித்து இருந்தார்.

இருப்பினும் இவர்களுடைய காதல் வதந்திகள் நிற்கவில்லை குறிப்பாக கடந்த மாதம் கூட இவர்கள் இருவரும் இந்த பிப்ரவரி மாதம் பெற்றோர்கள் முன்னிலையில், திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. பிறகு இதற்கு விஜய் தேவரகொண்டா  ” என்னுடைய திருமணம் குறித்து பரவுவது வெறும் வதந்தி. அவர்கள் சொல்வது எதுவும் உண்மை இல்லை” என விளக்கம் அளித்திருந்தார்.

சுதா கொங்கரா படத்திற்கு பை! ஹிந்தி படத்திற்கு செல்லும் சூர்யா?

இந்த நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” நான் செய்யும் விஷயங்கள் அனைத்திற்கும் விஜய்யின் ஆதரவு எப்போதும் உண்டு. நான் ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அந்த நேரத்தில் அவருடைய ஆலோசனையை கண்டிப்பாக எடுப்பேன். எதாவது எனக்கு தெரியவில்லை சந்தேகம் விஷயம் இருந்தால் அவரிடம் கேட்பேன்.

நான் சினிமா துறையில் இருக்கிறேன் என்ற காரணத்தால் எனக்கும் இது மிகவும் அவசியம். தனிப்பட்ட முறையில் விஜய் என் வாழ்க்கையில் மிகவும் உறுதுணையாக இருந்தவர். சினிமாத்துறையில் எனக்கு கிடைத்த நல்ல நண்பர் அவர் தான். எது நல்லது எது கெட்டது என்று  எனக்கு நன்றாகவே தெரியும். என்னை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்” எனவும் ராஷ்மிகா மந்தனா கூறிஉள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment