சிக்கிமிற்கு பயணம் மேற்கொள்ளும் ராஜ்நாத் சிங்..!

சீனாவுடனான தற்போதைய எல்லை மோதல்களுக்கு மத்தியில்,  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகின்ற 23-24 தேதிகளில் சிக்கிம் செல்ல உள்ளதாகவும், அங்கு வீரர்கள் மற்றும் மக்களை எல்லைப் பகுதிகளுக்கு எளிதாக செல்வதற்கு கட்டப்பட்ட பல சாலை  மற்றும் பாலங்களை திறந்து வைப்பார் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

சீன எல்லைக்கு அருகிலுள்ள சிக்கிமில் நிறுத்தப்பட்டுள்ள உள்ளூர் பிரிவுகளில் ஒன்றில் தசராவின் போது ஆண்டுதோறும் போர்வீரர்கள் ஆயுதங்களை வணங்குகிறார்கள். எனவே இந்த பூஜையில்  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.

சீனர்களால் ஊடுருவக்கூடிய முயற்சியையும் தடுக்க எல்லையில்  வீரர்களை நிறுத்தியுள்ள இடங்களையும் பாதுகாப்பு அமைச்சர் பார்வையிடலாம். இந்த ஆண்டு ஏப்ரல்-மே முதல் லடாக் முதல் வடகிழக்கில் அருணாச்சல பிரதேசம் வரை இந்தியாவும், சீனாவும் மோதலில் ஈடுபட்டுள்ளன. இதற்காக எல்லையில் இந்தியா 60,000 வீரர்களை நிறுத்தியுள்ளது.

author avatar
murugan