ஓரமா போமா! அம்பானி மகன் திருமண விழாவில் கடுப்பான ரஜினிகாந்த்?

Rajinikanth முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் வருகின்ற ஜூலை 12-ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது. திருமணத்தை முன்னிட்டு முந்தைய நிகழ்ச்சிகள் பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி குஜராத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த திருமண நிகழ்ச்சியில்  பல பிரபலங்களும் கலந்து கொண்டு வருகிறார்கள்.

READ MORE – தயவு செஞ்சு தவறவிடாதீங்க! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பற்றி கார்த்திக் சுப்புராஜ்!

இந்நிலையில், அம்பானி மகன் திருமண விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவருடைய மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விட்டு வேலைக்கார பெண் என அனைவரும் கலந்துகொள்ள குஜராத் ஜாம்நகர்க்கு சென்று இருக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வந்தது.

read more- களைகட்டும் ஜாம்நகர்… அம்பானி வீட்டு திருமணத்துக்கு வருகை தந்த பிரபலங்கள்.!

அதில் ஒரு வீடியோ தான் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. வீடியோவில் அம்பானி மகன் திருமண விழாவில்  கலந்து கொள்ள தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த போது புகைப்படம் எடுப்பவர்கள் சார் புகைப்படம் என்று கூறினார்கள். உடனடியாக ரஜினி தனது குடும்ப உறுப்பினர்களை மட்டும் தனியாக நிற்க்க வைத்துவிட்டு பின்பே வந்த விட்டு வேலைக்கார பெண்ணை தள்ளி நிற்க சொன்னார்.

இதனை பார்த்த பலரும் கடுப்பாகி ரஜினி இப்படியான மோசமான செயலை செய்து இருக்கிறார் என்று விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனையடுத்து, ரசிகர்கள் பலரும் இதற்கு முன்னதாக அந்த வேலைக்கார பெண்ணுடன் ரஜினிகாந்த் எடுத்த புகைப்படத்தை வெளியீட்டு ரஜினிகாந்த் அவர் வீட்டு வேலை பெண்ணை தவிர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால். அவர் விமானத்தில் ஏற்றி கூட்டி வந்து 100 கேமராக்களின் முன்பு செய்திருக்க மாட்டார் என்று கூறி வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment