கொரோனாவால் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்கு வந்த சோதனை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் வருகிறார். இந்த படம் கிராமத்து பின்னணியில், விவசாய கதையம்சங்களை கொண்டு உருவாகி வருகிறது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டுக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை கொல்கத்தா, புனே போன்ற வடமாநிலங்களில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் அச்சத்தால், அங்கு படப்பிடிப்புகள் ரத்து செத்துவிட்டு, ராமொஜிராவ திரைப்பட நகரிலேயே மீண்டும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக தஃவழக்கில வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.