அயோத்தி ராமர் கோயிலுக்கு புறப்பட்டார் ரஜினிகாந்த்.!

உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு நாளை (ஜன.22ம் தேதி) கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக ராமர் பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட மிக முக்கிய நபர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், இந்த விழாவில் பங்கேற்க சினிமா பிரபலங்குக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி புறப்பட்டார். கிளம்புவதற்கு முன், சென்னை போயஸ் தோட்டத்தில் பேட்டியளித்த அவர், “ராம ஜென்ம பூமிக்கு” செல்வதில் மகிழ்ச்சி என்று கூறினார்.

200 கிலோ ராமர் சிலை.. கிரேன் மூலம் அயோத்தி கோயிலுக்கு வருகை.!

ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்ட ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் இருந்து முதல் கெஸ்ட்டாக ரஜினி அயோத்தி சென்றிருக்கிறார். அந்த வகையில் ரஜினியை தவிர, வேற முக்கிய நடிகர்கள் செல்கிறீர்களா இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.