இந்த வருடத்திற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு!

விளையாட்டு துறையில் உயரிய விருதாக இந்திய அரசால் வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது  வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருடத்துக்கான விருதுக்கான பரிசீலனை இரண்டு நாட்களாக டெல்லியில் நடைபெற்றது.

அந்த விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் பதக்கம் வென்ற  மாற்றுத்திறனாளி தீபா மாலிக் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.