ராஜஸ்தான் அரசியல்.. இடைக்கால தடைவிதிக்க மறுப்பு.! காங்கிரஸ் நிம்மதி.!

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் 18 எம்.எல்.ஏ க்களுடன் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை சார்ந்த 6 எம்.எல்.ஏ.-க்களை காங்கிரஸ் கட்சியுடன் அசோக் கெலொட் இணைத்திருந்தார். இந்நிலையில்,பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அந்த மனுவில், எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு எதிர்ப்பு  தெரிவிக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்  எம்.எல்.ஏ இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

ஆனால்,  நீதிபதி பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கையை நிராகரித்தார்.  சச்சின் பைலட் மற்றும் 18 பேர் டெல்லியில் முகாமிட்டுள்ளதால்  காங்கிரசுக்கு 102 இடங்கள் மட்டுமே உள்ளது. இந்த 6 எம்.எல்.ஏக்கள் இணைபுக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தால் காங்கிரஸ் பலம் 96 ஆக குறைந்து இருக்கும்.

வருகின்ற 14-ம் தேதி சட்டசபையில் காங்கிரஸ்  பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan