#RainAlert:தமிழகத்தில் இன்றும்,நாளையும் மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம்,டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்  தெரிவித்துள்ளது.

குறிப்பாக,தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும்,நாளைய தினமும் தென் தமிழக மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசும் வானிலை தென்மேற்கு வங்கக் கடலில் தமிழகக் கடற்கரை, குமரி பகுதி மற்றும் மன்னார் வளைகுடாவை ஒட்டி இருக்கும்.குறிப்பிட்ட காலப்பகுதியில் மீனவர்கள் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.