4 மணிநேரத்திற்கு மேலாக கனமழை!சூறைக்காற்று..மின்தடை!

தமிழகத்தில் தற்போது கடும் வெயில் நிலவி வரும் நிலையில் 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்துள்ளது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, தோகைமலை, கடவூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும்  ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4 மணி நேரத்திற்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

சூறைக்காற்றுடன் பெய்த இந்த கன மழையால் அங்கு பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.மேலும் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைந்துள்ளதாகவும்,மழையின் வரவால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

author avatar
kavitha