சிறுமியின் ஆசையை நிறைவேற்ற ராகுல்காந்தி செய்த அசத்தலான செயல்…!

ஒரு சிறுமி, ராகுலின் சகோதரியான பிரியங்கா காந்தியிடம் பேச வேண்டும் என கூற, பிரியங்கா காந்திக்கு வீடியோ கால் செய்து கொடுத்த ராகுல்காந்தி. 

கேரளாவில் தனது தொகுதியான வயநாட்டில் உள்ள, ஜீவன்ஜோதி ஆதரவற்றோர் இல்லத்தில், காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, ஈஸ்டர் தினத்தை அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். அந்த இல்லத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் அங்கிருந்த குழந்தைகளுடன் இணைந்து உணவருந்தினார்.

இந்நிலையில், அங்கிருந்த ஒரு சிறுமி, ராகுலின் சகோதரியான பிரியங்கா காந்தியிடம் பேச வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியின் விருப்பத்தை விருப்பத்தை ஏற்றுக் கொண்டு, அவர், பிரியங்கா காந்திக்கு, வீடியோ கால் செய்து அந்த சிறுமியிடம் பேச கொடுத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.