INDvsENG : கே.எல்.ராகுல் கீப்பராக விளையாட மாட்டார் –  ராகுல் டிராவிட்!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் வரும் வியாழன் 25-ஆம் தேதி தொடங்குகிறது. போட்டி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் வீரர்கள் பலரும்  பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

இந்திய அணியில் விராட் கோலி தனிப்பட்ட சில காரணங்களுக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதில் அந்த இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என ரசிகர்கள் பலரும் ஒரு பக்கம் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் முழுக்க முழுக்க ஒரு பேட்டராக மட்டுமே விளையாட இருப்பதாகவும், அவர் விக்கெட் கீப்பராக விளையாடமாட்டார் எனவும் பயிற்சியாளர்  ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

#INDvsENG : விராட் கோலி இடத்துக்கு அவர் சரியா இருப்பாரு! ஆகாஷ் சோப்ரா கருத்து!

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய  ராகுல் டிராவிட் ” கே.எல். ராகுல் வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார். வீரர்களை தேர்வு செய்யும்போதிலிருந்தே நாங்கள் அதை பற்றி தெளிவாக இருந்தோம் என்று நினைக்கிறேன். கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக விளையாடமாட்டார் என்றால் அவருக்கு பதிலாக இருவரை நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்து இருக்கிறோம்” எனவும் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக விளையாடவில்லை என்றால் இந்திய அணியில் கே எஸ் பரத் இடம்பெற்று அவர் கீப்பராக விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எந்த வீரர்கள் எல்லாம் அணியில் இடம்பெறுகிறார்கள் என்பதறகான விவரத்தை விரைவில் பிசிசிஐ அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.