முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ரபெல் நடால்

முதல் முறையாக ரபெல் நடால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியானது ரோம் நகரில் நடந்து வருகிறது.இந்த போட்டியில் ஆண்கள் ஒன்ரையர் பிரிவு அரைஇறுதியில் ஸ்பெயின் நாட்டு டென்னிஸ் வீரர்  ரபெல் நடால் கீரிஸ் நாட்டை சேர்ந்த வரும்  தரவரிசை பட்டியலில் 7 இடத்தில் இருப்பவரும் ஆன சிட்சிபாஸ்சை 6-3, 6-4  நேர செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.இந்த ஆண்டு களிமண் தரை போட்டியில் ரபெல் முதல் முறையாக நுழையும் இறுதிப்போட்டி  இதுவாகும்.

அதே போல் பெண்கள் ஒன்றை பிரிவில்  அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து நாட்டின் டென்னிஸ் வீராங்கனை ஜோஹன்னா கோன்டா  நெதர்லாந்து நாட்டு வீராங்கனையும் தரவரிசையில் 4வது இடத்தில் உள்ளவருமான கிகி பெர்டென்சை 5-7, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

author avatar
kavitha

Leave a Comment