இந்த பதவி தேர்வுக்கு தமிழ், ஆங்கிலத்தில் வினாத்தாள் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவி தேர்வுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள்.

ஜூன் 19-ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவி தேர்வுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் இருக்கும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது. விருப்ப பாடங்களின் வினாத்தாள் தமிழ், ஆங்கிலத்தில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதன்படி, சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ச்சி மற்றும் குற்றவியல் படத்திற்கு தமிழ், ஆங்கிலத்தில் வினாத்தாள் அமைக்கப்படும் என கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் ஜூன் 19-ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும் TNPSC ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வினாத்தாள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்