தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அக்டோபர் 12 வரை நீட்டிப்பு.!

1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12வரையில் நீட்டிக்கபடுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் 1முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையானது, அக்டோபர் 9ஆம் தேதி வரையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது அந்த விடுமுறையானது 3 நாள் நீட்டிக்கப்பட்டு, அக்டோபர் 12 வரையில் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 12 வரையில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் இந்த விடுமுறை தினம் நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment