சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன்… இறுதி போட்டியில் கம்பீரமாய் களமிறங்க போகும் பி.வி.சிந்து.!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேற்றம் அடைந்துளளர். 

சிங்கப்பூரில் 2022 ஆண்டுக்கான ஓபன் பேட்மிட்டன் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நெய்வால், எச்.எஸ்.பிரணாய்  ஆகியோர் களமிறங்கினர்.

இதில்  சாய்னா நெய்வால், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் காலிறுதியை தாண்டாமல் ஏமாற்றம் அளித்தனர். ஆனால், பி.வி.சிந்து இந்தியாவுக்கு ஏமாற்றம் அளிக்காமல் , அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று பதக்கத்தை நோக்கி முன்னேறி வருகிறார்.

அரை இறுதியில் பி.வி.சிந்து , ஜப்பான் வீராங்கனை சோனா காவகாமி உடன் மோதி, 21-15 , 21-7 என்கிற கணக்கில் வெற்றிகண்டார். இதன் மூலம் இந்தியா சார்பில் சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டனில் இறுதி போட்டிக்கு கம்பீரமாய் களமிறங்கியுள்ளார் பி.வி.சிந்து.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment