Badminton : அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் பிரனாய் ..!

Badminton : நடைபெற்று கொண்டிருக்கும் ஆசிய பேட்மிண்டன் சேம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரனாயும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்துவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

சீனாவில் உள்ள நிங்போ ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஜிம்னாசியத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான  32-வது பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த பிரனாயும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் நடைபெற்ற போட்டி ஒன்றில் பி.வி .சிந்து மலேசியன் வீராங்கனை ஆன கோ ஜின் வெய்யை எதிர்த்து விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் சுற்றில் 18-21 என்ற செட் கணக்கில் தோற்றாலும் தொடர்ந்து நடந்த இரண்டு சுற்றில் 21-14, 21-19 என்ற செட் கணக்கில் கோ ஜின் வெய்யை வீழ்த்தி அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேற்றி உள்ளார்.

அதே போல ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் சீன வீரரான குவாங்கை எதிர்த்து விளையாடினார். இதில் 17-21 ,23-21, 23-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றானா ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மேலும், நாக்-அவுட் சுற்றாக நடைபெற்று கொண்டிருக்கும் இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த லக்சயா சன், கிடாம்பி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முதல் சுற்றிலே தோல்வி பெற்று தொடரிலிருந்து வெளியேறினார்கள்.

அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்திய அணியின் பி.வி.சிந்து, சீனாவை சேர்ந்த ஒய்.ஹானை எதிர்த்தும், இந்திய வீரரான பிரனாய் தாய்வானின் லின்னை எதிர்த்தும் விளையாட உள்ளனர்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.