ரகானே படு மோசமான ஆட்டம்! பஞ்சாப் அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனை தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி வீரர்கள் துவக்கம் முதலே மிக மெதுவாக ஆடினர். லோகேஷ் ராகுல் 47 பந்துகளில் 52 ரன்களும் கிறிஸ் கெய்ல் 22 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து வந்த மயாங்க் அகர்வால் 26 ரன்னும் டேவிட் மில்லர் 40 ரன்னும் எடுத்தனர் இதன் மூலம் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் அணி 182 ரன் குவித்தது. கடைசியாக வந்த பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 பந்துகளில் 17 ரன் குவித்தார். ராஜஸ்தான் அணியின் சார்பில் சோப்ரா ஆச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 182 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி துவக்கம் முதலே நன்றாக ஆடியதும் அந்த அணியின் திருப்பதி 45 பந்துகளில் 50 ரன் விளாசினார்ம் அடுத்தடுத்து வந்த வீரர்கள் அதிரடியாக ஆடினார்ம். ஆனால் அந்த அணியின் கேப்டன் ரகானே மட்டும் 21 பந்துகளுக்கு வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்ம. அதனை தொடர்ந்து வந்த ஸ்டூவர்ட் பின்னி 11 பந்துகளில் 33 ரன் விளாசினார். இதன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி 170 ரன்கள் மட்டுமே. எடுத்தது இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் தோற்றது,

author avatar
Srimahath

Leave a Comment