குப்பை கொட்டியதால் வந்த வினை… முதலமைச்சர் வீட்டுக்கு 10,000 ரூபாய் அபராதம்.!

அனுமதியின்றி, விதிகள் மீறி குப்பை கொட்டப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, பஞ்சாப் முதல்வர் வீட்டிற்கு அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.  

பஞ்சாப் மாநிலத்தின் அண்மையில் முதல்வராக பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பக்வந் சிங், வீடு பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில் உள்ளது.

இந்த வீட்டில் , அனுமதி இன்றி குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து, வந்த சண்டிகர் நகர் முனிசிபாலிட்டி அதிகாரிகள்,

ஆய்வு செய்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து விட்டு சென்றுள்ளனர்.  “முதலமைச்சர் மாநிலத்திற்கு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும், ஆனால், அவர் வீட்டில் இப்படிப்பட்ட ஒழுங்கற்ற செயல்கள் நடைபெறுகிறது.” என உள்ளூர் பாஜக கவுன்சிலர் மகேஷ் இந்தர் சிங் சித்து கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment