ஆதார் எண் – மின் இணைப்பு எண் இணைப்பு வழக்கு.! உயர்நீதிமன்ற தீர்ப்பு தேதி இதோ.!

மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்ற வழக்கின் தீர்ப்பு வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. 

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அண்மையில் அறிவுறுத்தியது.  இதற்காக இந்த மாத இறுதி வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

இதனை குறிப்பிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதியினை வெளியிட்டுள்ளது அதன்படி, இந்த தீர்ப்பானது வரும் டிசம்பர் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment