இந்த மாவட்டத்தில் PaperBoat குளிர்பானத்திற்கு தடை.! ஆட்சியர் அதிரடி.!

நீலகிரி மாவட்டத்தில் PaperBoat குளிர்பானத்தை விற்பனை செய்யத் தடை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களில் PaperBoat  என்ற நிறுவனத்தின் குளிர்பானங்கள் விற்கப்படுகிறது. இந்த குளிர்பானத்தில் அடைக்கப்பட்டுள்ள பாக்கெட்டில் உட்புறமும், வெளிப்புறமும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தபடுவதாக சுற்றுச்சூழல் துறையினர் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.

இதனால்,  PaperBoat குளிர்பானத்தை வருகின்ற ஜூலை 1-ம் தேதி முதல் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட   ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

author avatar
murugan