விக்ரம் படத்தில் நடிக்கவிருந்த பிரியா ஆனந்த்! எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. அதுமட்டுமின்றி படத்தில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் மிகவும் பிரபலமானார்கள் என்றே கூறலாம்.

குறிப்பாக கமல்ஹாசனுக்கு மருமகளாக நடித்த நடிகை சுவாதிஸ்தா கிருஷ்ணன், நடிகை மாயா கிருஷ்ணன் ஆகியோர் மிகவும் பிரபலமானார்கள். இதில் சுவாதிஸ்தா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது அவர் இல்லயாம். அவருக்கு பதிலாக வேறொரு நடிகை தான் நடிக்கவிருந்ததாம்.

அவர் வேறு யாரும் இல்லை எதிர்நீச்சல், வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பிரியா ஆனந்த் தான். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவரிடம் முதலில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாம். ஆனால், அந்த சமயம் சில தனிப்பட்ட காரணங்களுக்காக படத்தில் தான் நடிக்கவில்லை என்று பிரியா ஆனந்த் கூறினாராம். இந்த தகவலை லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக பிரியா ஆனந்த் பெரிதாக எந்த படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை இப்படியான நேரத்தில் கமல்ஹாசன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அவர் நடிக்காதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்டிப்பாக விக்ரம் படத்தில் அவர் நடித்திருந்தால் அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், விக்ரம் படத்தில் சுவாதிஸ்தா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரங்களின் காட்சிகள் குறைவான நேரம்  மட்டுமே வரும் எனவே, இதன் காரணமாக கூட பிரியா ஆனந்த்  அந்த  கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்து இருக்கலாம் எனவும் சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. மேலும், பிரியா ஆனந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படத்தில் அவர் இயக்குனர் கெளதம் மேனனுக்கு ஜோடியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.