ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்த தனியார் பேருந்து உரிமையாளருக்கு ரூ.20,000 அபராதம்.!

ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்த தனியார் பேருந்து உரிமையாளருக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டையை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரிடம் தனியார் பேருந்தில் ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்துள்ளார். நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இசக்கிமுத்துவுக்கு ரூ.20,000 வழங்க நீதிபதி ஆணையிட்டுள்ளார். இதனிடையே, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய 4 ம் கட்ட ஊரடங்கு வரும் 30-ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில், மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்