ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இன்று ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஆரோக்கியமான பூமியை உருவாக்குவதற்கான வலிமையை ஈஸ்டர் வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.