சென்னையில் ஒவ்வொரு வார்டுகளிலும் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது!

சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்த நிலையில், ஒவ்வொரு வார்டுகளிலும் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. மேலும், அங்கு ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் பாதிப்பு ஏற்படுவதால், மொத்த பாதிப்பு 44,661ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் தலைமை செயலகத்தில் மருத்துவக்குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை முடிவில் மருத்துவக்குழுவினர், சென்னையில் ஒவ்வொரு வார்டுகளிலும் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, சென்னையில் ஊரடங்கை கடுமையாக்கவும் மருத்துவக்குழு முதல்வரிடம் பரிந்துரை செய்தனர்.