கொரோனா தடுப்பு – பிரதமர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடக்கம்!

கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

கொரோனா தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை மிரட்டி வரும் புதிய வகை கொரோனா இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தலைமையிலான அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, புதிய BF.7 வகை கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ள நிலையில், வைரஸ் பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment