28 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க ராம் நாத் கோவிந்த் ஒப்புதல்.!  

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 28 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

புது தில்லி:

உத்திரபிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 28 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், அலகாபாத் உயர்நீதிமன்றம் நாட்டின் மிகப்பெரிய உயர் நீதிமன்றத்தின் பிரிவில் இருந்து வருகிறது.

இது தொடர்பாக, நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியதாக நியமிக்கபட்ட நீதிபதிகள்:

நீதிபதி பிரகாஷ் பாடியா, நீதிபதி அலோக்மதூர், நீதிபதி பங்கஜ் பாட்டியா, நீதிபதி சவுரா ரபல்வானியா, நீதிபதி விவேக் வர்மா, நீதிபதி சஞ்சய் குமார் சிங், நீதிபதி பியூஷ் அகர்வால், நீதிபதி பூஷ்யம்ஷாஷ்மிரி, நீதிபதி ஜஸ்பிரீத் சிங், ராஜீவ் சிங், திருமதி மஞ்சு ராணி சவுஹான் யோகேந்திர குமார் ஸ்ரீவாஸ்தவா, மனிஷ் மாத்தூர், ரோஹித் ரஞ்சன் அகர்வால், ராம் கிருஷ்ணா கெளதம், உமேஷ் குமார், பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர, அனில் குமார், ராஜேந்திர குமார், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக பைஸ் ஆலம் கான், விகாஸ் குன்வர் ஸ்ரீவஸ்தவா, வீரேந்திர குமார் ஸ்ரீவாஸ்தவா, சுரேஷ் குமார் குப்தா, செல்வி காண்டிகோட்டா ஸ்ரீதேவி, நரேந்திர குமார் ஜோஹ்ரி, ராஜ் பிர் சிங் மற்றும் அஜித் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment