சீனாவின் ஹோட்டானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! 4.7 ரிக்டர் அளவில் பதிவு..!

சீனாவின் ஹோட்டானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவின் ஹோட்டனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.

தென்மேற்கு ஜின்ஜியாங்கில் உள்ள ஒரு பெரிய நகரமான ஹோட்டனில் இருந்து தென்கிழக்கே 263 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 11 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சீனாவின் ஹோட்டானை 17 கிமீ ஆழத்தில் தாக்கியுள்ளது என யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என்று தகவல்கள் உள்ளன.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment