பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடிகளா..? வெளியான சூப்பர் தகவல்.!

மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ponniyin selvan

இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஆவலுடன் காத்துள்ளது.

இதையும் படியுங்களேன்- பெண்களிடம் கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டு பசங்கள பாருங்க…கொஞ்சம் ஓவரா பேசிய குட்டி அர்ச்சனா.!

PonniyinSelvan

தமிழகத்தில் மட்டுமே இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 700 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது. பல இடங்களில் டிக்கெட்கான முன்பதிவு முடிந்துவிட்டது என்று கூட கூறலாம்.  இந்த நிலையில், தற்போது படம் முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் எத்தனை கோடி வசூல் செய்யும் என விநியோகதஸ்தர்கள் போட்டுவைத்துள்ள கணக்கு விவரம் பற்றியை தகவல் தற்போது கிடைத்துள்ளது.

ponniyin selvan

அதன்படி, தற்போது தமிழகத்தில் டிக்கெட் புக் ஆவதை வைத்து பார்க்கையில் படம் முதல் நாளில் ரூ. 25 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இத்தனை கோடிகள் வசூல் செய்யுமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment