விசிக பேரணி..! திமுக, காங்கிரஸ்,மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற சனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும் – திருமாவளவன்

சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற சனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும் என திருமாவளவன் அறிக்கை. 

அக்.2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்க்கு நாம் தமிழர் கட்சி, திராவிடர் கட்சி போன்ற காட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற சனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த போராட்டத்தில்,  மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் மன்றம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கட்சி சாரா அமைப்புகளும் மற்றும் எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், நாம் தமிழர் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி, சிபிஐ (எம்.எல் விடுதலை), அ.தி.ம.மு.க. உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும் இந்த மனித சங்கிலி அறப்போரில் பங்கேற்கப்போவதாக முன்வந்து அறிவித்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment