#BREAKING: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனுத்தள்ளுபடி..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் காவல்துறை தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி விசாரணை நடத்தினர். அதில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட 10 போ் மீது கொலை அடைக்கப்பட்டனர். இதையடுத்து, வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

சமீபத்தில், சிறையில் இருந்த எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் உயிரிழந்தாா். பின்னர், சிபிஐ அதிகாரிகளுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, சிபிஐ அதிகாரிகள் கொரோனாவில் இருந்து மீண்டு விசாரணையை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், சிறையிலிருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல்செய்து இருந்தார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து நீதிபதி பாரதிதாசன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

author avatar
murugan