இளம்பெண் ஒருவரின் முடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்த போலீஸ்! வைரலாகும் வீடியோ!

இளம்பெண் ஒருவரின் முடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்த போலீஸ்.

ஜார்கண்ட் மாநிலத்தில், போலீஸ் அதிகாரி ஒருவர், இளம்பெண் ஒருவரின் முடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த வீடியோவை திரைப்பட இயக்குனர் அவினாஷ் தாஸ் தனது ட்வீட்டரில் பதிவிட்டு, ஜார்கண்ட் முதல்வருக்கு ரீட்வீட் செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த அம்மாநில டிஜிபி, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள டிஎஸ்பி ஒருவரை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தலித் சமூகத்தை சேர்ந்த அந்த இளம்பெண், காதல் திருமணம் தொடர்பாக புகாரளிக்க வந்த நிலையில், அப்பெண் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.