கேரளாவில ட்ரோன் மூலமாக கிரிக்கெட் கமென்ட்ரி கொடுத்து மக்களை விரட்டும் போலீசார்

நாடு முழுவதும் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவை மீறி வெளியே வருபவர்களை போலீசார் எச்சரித்து வருகின்றனர்.அந்த வகையில்,கேரள போலீசார் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.அதாவது கேரள போலீசின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த வீடியோவில் ,ட்ரோன் கேமராவில் கிரிகெட் வர்ணனையுடன் ஒப்பிட்டு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் ட்ரோனை கண்டதும் முகத்தை மூடிக்கொண்டு மக்கள் அலறி ஓடுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.