காவல்துறை தாக்குவது கொரோனா போன்ற ஒரு தொற்று நோய்.! உயர்நீதிமன்ற மதுரை கிளை.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிகிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் இருவரும் அடுத்ததடுத்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது,  காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், உயர்நீதிமன்ற விசாரணையை பொதுமக்கள் குறைத்து நினைக்க  வேண்டாம், இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும் என்றும், கொரோனா காலத்தில் அனைவருமே மன அழுத்தத்தில் உள்ளனர்.

காவல்த்துறை கூடுதல் மன அழுத்தத்தில் உள்ளனர். அவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி விசாரணையை ஜூன் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

author avatar
murugan