8 நகரங்களில் இருந்து ‘படேல் சிலைக்கு ‘ சிறப்பு ரயில்கள் – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

படேல் சிலைக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து 8 ரயில்களை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு   ரூபாயில் மத்திய அரசு சிலை அமைத்தது.ந்த சிலைக்கு ஒற்றுமையின் சிலை என்றும் பெயர் உள்ளது.தற்போது சிலை அமைந்துள்ள இடம் முக்கியமான சுற்றுலாத்தலமாக பார்க்கப்படுகிறது.இந்நிலையில் நாட்டின் பல பகுதியிலிருந்து குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள படேல் சிலைக்கு 8 ரயில்களை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.

8 புதிய  ரயில்கள் விவரம் :

1.கெவாடியாவிலிருந்து – வாரணாசி செல்லும் மஹாமனா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில்

2.   தாதர் – கெவாடியா எக்ஸ்பிரஸ் தினசரி ரயில்

3. அகமதாபாத்திலிருந்து கெவாடியா செல்லும் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் தினசரி ரயில்

4. கெவாடியா – எச்.நிஜாமுதீன், நிஜாமுதீன் – கெவாடியா சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறை ரயில்

5. கெவாடியா – ரெவா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில்

6. சென்னை – கெவாடியா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில்

7. பிரதாப் நகர் – கெவாடியா தினசரி மின்சார ரயில்

8. கெவாடியா – பிரதாப் நகர் தினசரி மின்சார ரயில்