ஆக்ரா மெட்ரோ திட்டத்தின் கட்டுமான பணியை துவக்கி வைத்தார் – பிரதமர் மோடி

ஆக்ரா மெட்ரோ திட்டத்தின் முதல் கட்ட கட்டுமான பணியை காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்த திட்டத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மெட்ரோ திட்டம் மொத்தம் நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான இரண்டு பகுதி தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை போன்ற முக்கிய சுற்றுலா தலங்களை ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளுடன் இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்து. இந்த திட்டம், ஆக்ராவின் 26 லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று நகரத்திற்கு வருகை தரும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம், ஆக்ராவுக்கு சுற்றுச்சூழல் விரைவான போக்குவரத்து முறையை வழங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை நிர்மாணிப்பதற்கான செலவு ரூ .8,379.62 கோடி என்றும், இது ஐந்தாண்டுகளில் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.